Saturday, October 25, 2008

கடவுள் ?!

கடவுள் என்பது உண்மை என்றும் கற்பனை என்றும் வெகு காலமாக நடந்து வரும் விவாதத்திற்கு இரு கூட்டங்களை சேர்ந்தவர்களும் அவரவர்க்கு நியாயமாக படும் கருத்துகளை சொல்லி வருகிறார்கள்.

கடவுள் உண்டா என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்றும் 'இல்லை' என்றும் சாத்தியமான பதில்கள் இரண்டு.இந்த கேள்விக்கு மற்றொரு உண்மையான பதில் 'தெரியாது'

இத்தனை காலமாக ஒரு நிரந்தர விடை காண இடம் கொடுக்காமல் விவாதம் மட்டுமே நடத்த அனுமதி வழங்கிய இந்த கேள்விக்கு ஒரு பதில் கொடுக்கும் முயற்சியில் நான் ஈடுபடபோவதில்லை.



இதை பற்றி ஏதேனும் எழுத முற்படும் முன், இந்த கேள்வியை முதன் முதலில் உலகிற்கு கொண்டு வந்த பகுத்தறிவாளர்களுக்கு என் நன்றியை சொல்லி கொள்கிறேன்.
உங்களுடைய இந்த முற்போக்கு சிந்தனைக்கு என் ஆச்சிர்யம், பாராட்டு அனைத்தும் சமர்ப்பணம். அதற்கு முன் உங்களுக்கு சில விஷயங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்...

- உனது கடவுளை விட எனது கடவுள் தான் பெரிது என்று நம்பிக்கைக்கு
எடுத்துக்காட்டாக திகழும் மகான்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- முயற்சியால் கிடைக்காத வெற்றி அறை ஜான் கயிற்றினால்
கிடைக்கும் என்று நினைக்கும் மேதைகளின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- தன்னை வருத்திக் கொண்டால், பதிலாக தனக்கு நன்மை தருபவன் என்று
மனத்திரையில் கடவுளுக்கு வில்லன் கதாபாத்திரம் குடுத்திருக்கும்
பக்தர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- புண்ணியம் கிடைக்கும் என்று நம்பும் ஒரே காரணத்திற்காக பிறருக்கு சில
நன்மைகலேனும் செய்யும் பொதுநலக் காரர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

- சரித்திரக் கதைகளில் வரும் மாயாஜாலங்களை அப்பட்டமாக நம்பி வரும்
சிந்தனையாளர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- 90 சதவிகிதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பினும் உலகில்
நடைபெறும் குற்றங்களை எந்தவித குறைபாடும் இல்லாமல் நடத்தி வரும்
நியாயமானவர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

-அன்றாடம் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு, தப்பு செய்யும் தருணங்களில் மட்டும் ( அதனால் கிடைக்கும் லாபம்/சுகம்/திருப்தி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ) கடவுளை மறந்து விடும் நல்லவர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- கற்பனையா உண்மையா என்று தெரியாத ஒன்றிற்காக உண்மையில் இருக்கும் மனிதர்களை வெட்டிச் சாய்க்கும் வீரர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவை அனைத்தும் என்றாவது ஒழியும் என்றால்,அன்றைக்கு இந்த தலைப்பைப் பேச நாம் தகுதி பெற்றவர்கள் ஆவோம். அந்நாள் இந்நூற்றாண்டின் தேதிகளில் இடம் பெறுவது சந்தேகம் தான் எனினும், என்றேனும் நிகழப்போகும் அந்த நாளுக்காக சிறிது பகுத்தறிவை மிச்சம் வைப்போம். அது வரை இவ்விதிமுறைகளை மாற்ற முற்படுவோம். கடவுளின் பெயரால் நடக்கும் உயிர் சேதங்களைத் தவிர்ப்போம். அரிவாள் பேசுவதை நிறுத்தி, அறிவால் பேசத் துவங்குவோம்.

Thursday, October 16, 2008

Survival of the Fittest

தமிழ் சினிமா உலகில் தரமான படங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அவற்றுக்கு மக்கள் தரும் குறைந்த பட்ச ஆதரவே.மக்களின் ஆதரவு பெற்ற மிகச் சில நல்ல படங்கள் இருப்பினும்,அதை தவற விட்ட தரமான படங்கள் ஏராளம்.

இந்த பட்டியலில் நான் கண்ட ஒரு படைப்பு அல்லது நான் முதலில் சொல்ல விரும்பும் ஒரு படம் 'புதுப்பேட்டை'.செல்வராகவனின் திறனை முழுதும் எடுத்துக் காட்டிய இந்த படம் தமிழ் மக்களிடையே வெற்றியை தழுவ விட்டதில் ஆச்சிர்யம் ஏதும் இல்லை.



ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பாதை, அரசியல் கட்சியின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள், மனிதனின் வாழ்கையில் நிகழும் பொற்காலங்கள்/போர் காலங்கள் மற்றும் படத்தின் தலைப்பான Survival of the Fittest என்று எதை வேண்டுமானாலும் கதையின் சாராம்சமாகக் கூறலாம். ஒவ்வொரு காட்சியிலும் வசனம், பின்னணி இசை, காட்சி அமைப்பு ஆகிய அனைத்தும் மிக அழகாக சித்திரிக்கப் பட்டுள்ளன.

தரமான கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, கதாபாத்திரங்களின் தேர்வு,ஒளிப்பதிவு,பின்னணி இசை,பாடல்கள்.. எல்லாவற்றுக்கும் மேலாக சினிமாத்தனம் இல்லாத Reality. இவை அனைத்தும் இருப்பதால் தமிழ் நாட்டு ரசிகப் பெருமக்களுக்கு முதன் முறை பார்த்தவுடன் புரிந்துவிடும் என்று எதிர்பார்த்தது இயக்குனர் செல்வராகவனின் மிகப்பெரிய தவறு.

செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா ஜோடியின் இசைப் படைப்பில் உச்சத்தை எட்டியிருக்கும் ஒரு படைப்பு.
யுவன் சங்கர் ராஜா - நா.முத்துக் குமார் ஜோடியின் உச்சத்தை எட்டியிருக்கும் பாடல்கள்.

'இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்;
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்'

'உலகதின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்;
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் '

'இது அழித்தல் வேலை. இந்த உலகன் தேவை. அதை நாங்கள் செய்தல், ஊர் தான் வணங்குமா? '

'காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும் காத்திருக்காதே, கல்லடி கிடைக்கும்'

போன்ற பாடல் வரிகள் அதனை எடுத்துக் காட்ட போதுமானவை.



- நல்லதொரு படைப்பை வழங்கி தமிழ் சினிமா தரத்தின் உயர்வுக்கு உறுதுணை அளிக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி.

- தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களை கொண்ட படங்களை பட்டியலிட்டால் முன் வரிசையில் அமரக்கூடிய படங்களில் நிச்சயம் இடம் பெரும்
இந்த அறிய இசை படைப்பை கொடுத்த யுவன் சங்கர் ராஜா அவர்க்கு நன்றி.

- பாடல்கள் ஒவ்வொன்றுன்றிலும் தன் எழுத்து திறமையை நிரூபித்து காட்டிய பாடலாசிரியர் நா.முத்துக் குமார் அவர்க்கு நன்றி.

- 'ஒரு நாளில் வாழ்க்கை' என்ற உன்னதமான பாடல் ஒன்றை கொடுத்த
யுவன் சங்கர் ராஜா - நா.முத்துக் குமார் இனைப்புக்கு நன்றி.

- தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தரத்தை அதிகப் படுத்தி ரசிகர்களை குறைத்து கொண்ட இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி.

- இத்தனை சிறப்பு மிக்க ஒரு படைப்பை அடையாளம் தெரியாமல் மாத்திய நமது தங்கத் தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி.

Friday, October 10, 2008

Indian Submissions for Oscars

The Indian Government appoints a committee to choose the best movie released that year, which is sent as India's official entry to the Oscars for a nomination for Best Foreign Film the following year.

There are totaly 35 movies chosen for this nomination in varies time periods from varies languages across India, among which there are 8 Tamil movies which have been chosen for this nomination. Check them :

Year - Movie - Director

1969 - Deivamagan - Kiran Kumar Chenna
1987 - Nayagan - Mani Ratnam
1990 - Anjali - Mani Ratnam
1992 - Thevar Magan - Bharathan
1995 - Kurudhipunal - P.C. Sreeram
1996 - Indian - Shankar
1998 - Jeans - Shankar
2000 - Hey Ram - Kamal Haasan

Source :
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_submissions_for_the_Academy_Award_for_Best_Foreign_Language_Film


Kamal Haasan's involvement in the above movies:

As Actor - in 5 movies.
As Story writer - in 3 movies.
As Script writer - in 3 movies.
As Director - in 1 movie.

My Top 10 Movies in Tamil

1. Nayagan.
2. Thalapathi.
3. Thevar Magan.
4. Kuruthi Punal
5. Kannathil Muthamittal.
6. Hey Ram.
7. Indian.
8. Ramana.
9. Guna.
10.Iruvar.

Thursday, October 9, 2008

THE IDEAL NOSECUT

Kamal Haasan is one among the very few talented ones in Tamil Cinema Industry.He is well know for his new attempts in his work.No doubt that his movies gets involved in critics even before their release. Here is one among them. This is regarding one of his greatest works 'Virumandi'. This movie is not an exception in this aspect.

Earlier it was named as 'Sandiyar' and he has been compelled to change the name. Also there were much criticim on the subject in which the movie has been driven.

Kamal is well known for his speech (also). Here is one great reply from him for those whose criticise the name and subject of the movie Virumandi

Monday, October 6, 2008

எனக்குள் நான் - III

- கே : கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தப்பு செய்வது இல்லையா ?
ப : நல்ல கேள்வி !!

-கே : காதல் திருமணம்/ நிச்சயிக்கப்பட்ட திருமணம் - எது இன்பம் ?
: காதல் (திருமணம்)

-கே : பெண்கள் நம் கண்கள் ?
: ஆம். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு கண்கள் :)

-கே : காதல் வரமா? சாபமா?
: இருதலை காதல் வரம்;
ஒருதலை காதல் சாபம்.

-கே: கடவுள் இருப்பதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா ?
: உண்டு எனில் இக்கேள்வியே இருந்துருகாது .

-கே : ஆண்களுக்கு மட்டும் ஏன் காம உணர்ச்சி அதிகமாக உள்ளது ?
: அவ்வாறு அனைவரும் நம்புவதால்

-கே : கண்டுபிடிப்பின் எல்லை எது?
: கண்டுபிடிப்பின் எல்லை எது என்பதை கண்டு பிடிப்பது.

-கே : வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் யார் ?
ப : எப்போதும் சந்தோஷமாக இருக்க தெரிந்தவன்.


-கே : மூட நம்பிக்கைக்கு உதாரணம் ?
: நம்பிக்கையை மட்டும் வைத்து வெற்றிக்கு ஆசை படுவது.

-Q: Ladies first ????

A: Yes. There is alwayz a rough copy before a fair one.

NAVEEN'S QUOTES - II

It is interesting that theists becomes atheist during the time of their sin.

'Failures are stepping stones' is true. But the number of steps may extend to infinity.

Sex is a drug which is legally accepted.

Modern girls look good until you get close to them. Both physically and mentally.

Examples are better than Definitions for any term except ‘Example’.

Men invented weapons to rule the world; Women discovered themselves as weapons to rule men.