Tuesday, June 22, 2010

பிடித்த வசனங்கள் - I



"புத்திக்கு தெரியுது. மனசுக்கு தெரியல"
" எனக்கும் ரெண்டும் ஒன்னு தான்"

"அப்பா நீங்க தவம் இருந்து பெத்த புள்ள பா நான். என்ன கொன்னுடாதீங்க பா"
" டாக்டருக்கு கலர் டிவி, இன்ஸ்பெக்டருக்கு லேசெர் டிஸ்க், அப்பனுக்கு பாசமா? "

" உங்கள பொறுத்த வரைக்கும் நான் செய்றது கொலை. என்ன பொறுத்த வரைக்கும்
நான் செய்றது வெவசாயம் . புரியல? கல எடுக்குறது "

" தான் செய்றது தப்புனு கூட தெரியாத அளவுக்கு உங்களுக்கு தப்பு
பழகிப் போச்சு டா "


(படம்: இந்தியன்; வசனம்: சுஜாதா)


*******************************************************************************


"சும்மா கிண்டல் பண்ணாத. எனக்கும் அவருக்கும் இடைல எதும் இல்ல"
" அவ்ளோ டைட்டா கட்டி புடிச்சிட்டாரா ? "

(படம்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ; வசனம்: சுஜாதா)


*******************************************************************************

"சந்தோசம் ங்கறது அனுபவிக்கையில தெரியாதுங்க ; அது இல்லாம
போகுது பாருங்க. அப்ப தான் தெரியும் "

அபிராமி : 'இது உன்ன வெட்டுன அருவா. இந்த வீட்ல இருந்து வந்த
அருவா. பேர பாரு"

கமல் : 'கொ'....கோட்டைச்சாமி? "
அபிராமி : அது பெரிய கொம்பு . இது சின்ன கொம்பு. ஆனா பெரிய மாடு. "

(படம் : விருமாண்டி ; வசனம் : கமலஹாசன் )

*******************************************************************************

· " யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி. மதம் பிடித்தால் தொல்லை தான் "

(படம்: தசாவதாரம் ; வசனம் : கமலஹாசன் )

*******************************************************************************

· "எங்க அப்பா ஒரு Engineer, Writer, கோவக்காரர் “

( படம் : கன்னத்தில் முத்தமிட்டாள் ; வசனம்: சுஜாதா )

*******************************************************************************

· " வீரம் னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது "

(படம் : குருதிப்புனல் ; வசனம்: கமல்ஹாசன் )


Sunday, June 20, 2010

ஒன்றே செய் - நன்றே செய் ..!

“ C _ _ L “

“ THIS PROPERTY BELONGS TO ANOTHER PERSON. “

“ 1 + 1 = 2 “

“ ONCE IN A MONTH, I HATE BEING A GIRL. “

“ 100% NATURAL. “

என்ன டா.. ஒவ்வொன்னும் சம்பந்தாமே இல்லாமல் இருக்குனு பாக்குறீங்களா?
சம்பந்தம் இருக்கு. இவை எல்லாம், பெண்கள் அணியும் டி-ஷர்ட் களில்,
அவர்களின் மேல்தளத்தின் எழுதியிருந்த வாக்கியங்கள். நான் நேருக்கு
நேராக கண்ட நம் ஊர் பெண்களின் அலும்புகள் மட்டுமே இவ்வளவு. இன்னும் சில
High Class மாநகரங்களின் முக்கியத் தெருக்களில் நடந்தால், என்னென்ன
கிட்டுமோ தெரியவில்லை. ஒரு புத்தகம் எழுதலாம் போலும்.

இவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியவைகள்:

எங்கே வெவ்வேறு வேலைகளுக்கிடையில், ஓரிரண்டு முக்கிய விஷயங்களை
பார்க்காமல் மறந்துவிடப் போகிறர்கள் என்று எங்கள் மீது நல்லுள்ளம்
கொண்டமைக்கு நன்றி.

இம்மாதிரியான வாக்கியங்களை மேலே அணிந்து, துப்பட்டா அணியும் அணைத்து
பெண்களையும் கேலி செய்யும் உங்கள் தைரியம் அருமையோ அருமை.

எம்மாதிரி உடை அணியும் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கக் கூடாது
என்று நியாயத்துக்காக போராடும் சில பல பெண்களின் வாயை மூடியமைக்கு கோடி
நன்றிகள்.

'வாக்கியங்கள் எதாவது இருந்தால், அதை மட்டும் படித்து விட்டு 'படம்'
பார்க்க மறந்துவிடுவர்' என்று இச்செயலில் எதாவது சூட்சமம் இருந்தால்,
மன்னிக்கவும். நாங்கள் அப்படிப்பட்ட ஏமாளிகள் அல்ல. குறைந்தபட்சம் நான்
அப்படி இல்லை.

உங்கள் தோற்றங்களையும், இன்ன பிற செயல்களையும் கவனிக்காத உங்கள் அம்மா
மார்கள், அப்பா மார்கள், அண்ணன் மார்கள், கணவன் மார்களுக்கு நாங்கள்
என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கடைசியாக, உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை. அதற்கான எங்கள் ஆதரவு
நிச்சயம் உண்டு

Saturday, June 19, 2010

காதலும் காமமும்


பல நேரங்களில்
என் கவனம் சிதறடித்து
வழி மாறி முனைவதற்கு
முழுக்க முழுக்க காரணம்
உன் கண்கள் மட்டுமே,
என்று சொன்னால்
அது பச்சைப் பொய்.

எது அழகு
என்று தேட வைக்கும்
அந்த விஷம அழகு
உன் மேனிக்கு
மட்டும் உண்டு.

காதலும் காமமும்
தன்டவாளக் கோடுகள்
என்றாய்.
இன்று ஏனோ
தடம் புரண்டது

பசி
மறக்கப் படுவதும்
மறுக்கப் படுவதும்
மறைக்கப் படுவதும்
இதைத் தவிர
வேறு எதில்?

காமரூபக் கதைகள்
படிக்கும் வேலையில்
எனை தடுத்த உனக்கு
தண்டணை மறுக்கப் பட்டது,
கதை நிஜம் ஆன
ஒரே காரணத்தினால்.

முதன்முறை
மனம் தொலைந்த
பொழுதின் அதே தயக்கம்.
இன்று முதன்முறை
வெட்கம் தொலைக்கும் பொழுதும்.

Friday, June 18, 2010

எனக்குள் நான் - V


-கே: ஆண் பெண் நட்பு?
ப: பிம்பம்.

-கே: அழகில்லா பெண்களை பார்த்து பரிதாபப் படுவதுண்டா?
ப: ஆம். அவர்கள் தன்னை அழகாக காண்பிக்க முயலும்போது.

-கே: கலாச்சாரம் என்பது ?
ப: உஷ்ணம் தரும் போர்வை.

-கே: காதலர்க்கு ஆதரவா?
ப: காதலுக்கு ஆதரவு.

-கே: பெண்கள் கிரிக்கெட் பிடிக்குமா?
ப: பெண்கள் பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கும்.

Thursday, June 17, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா


-த்ரிஷாவின் அழகில் மயங்கி விழுபவர்கள்,
-
காதல் காட்சிகளைக் கண்டு உருகும் ஜீவன்கள்,
-
ஆரம்ப நிலைக் காதலர்கள்,
-
காதலுக்காக ஏங்கிக் கொண்டிருபவர்கள்,
-
சினிமாவில் வருவது போல் காதல் வயப்பட்டவர்கள்,
-
காதல் தோல்வி அடைந்தவர்கள்,
-
சுருக்கமாகச் சொன்னால் -சாதரணமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதல் செய்பவர்களும், காதலுக்கு ஏங்காமல் இருப்பவர்கள்- தவிர்த்து இருக்கும்மற்றவர்கள்,
-
திரையில் வரும் காட்சிகளை தனக்கு ஒப்பிட்டு பிடித்தமானதாக்கிக் கொள்பவர்கள்,
-
தொடர்கதையில் காதல் செய்யும் முத்துவும் ராணியும் திருமணம் செய்தல் சந்தோஷப் படும் சாதாரணர்கள்,
-
காட்சிகளில் ஸ்டைல், ராயல் லுக், அழகு இருந்தால் சிறந்த காட்சி அமைப்பு என்று நம்புபவர்கள்,
-
அடாவடித் தனம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர், அதை விடுத்து சாதாரணமாக நடித்தால் அதை சிறந்த நடிப்புஎன்று சொல்பவர்கள்,
-
பாடல்களைக் கேட்பதற்கு முன்பே .ஆர். ரஹ்மான் என்ற பெயருக்காக பாடல்களுக்கு ரசிகர் ஆகுபவர்கள்,
-Script
இல்லை என்றாலும் வெறும் Making வைத்து 'நல்ல படம்' பெயர் கொடுப்பவர்கள்.

இவர்களில் ஒருவரேனும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை ஒரு சிறந்த படமாக மிகைப்படுத்திச் சொல்லக் கூடும். நம்பி விடாதீர்கள்.

பி. கு1: இது ஒரு Pizza Hut அட்டையில் வைத்து கொடுக்கப்பட்ட ஒன்றரை ரூபாய் பன்.
பி. கு2:
உன் கண்ணுல காதல் தெரிஞ்சிது', '10எண்ணுவதற்குள் திரும்பி பார்ப்பா' போன்ற 1008 முறை அரைத்த மாவுகள் நீங்கலாக நல்ல ரசனைக்கு கிடைத்த தீனிகள் இந்தஓரிரு வசனங்கள் மட்டுமே :

'
அவளோட Front விட Back தான் அதிகமா பாத்தேன். Not that I am complaining here’
'
நான் மட்டும் தான் பேசுவேன். அவ பேசவே மாட்டா. Like one way traffic to a heart breaking City'

Tuesday, June 15, 2010

பகிர்தல்

ஷில்மிஷம்:

நீ செய்தாலும் சரி
நான் செய்தாலும் சரி
கடைசியில் நீ வெக்கப்பட்டு
பழியை என் மேல் தள்ளிவிடுகிறாய்..!


பிடித்தது:

உன்னில் எனக்கு பிடித்தது
என்ன தெரியுமா?
இக்கேள்விக்கான என் விடையை
மற்றிக்கொண்டே இருக்கிறாயே,
அது தான்..!


பெண்மை:

எல்லைகள் மீறிய
தருணங்களில் அல்ல,
அவை மறுக்கப்பட்ட
தருணங்களில் உணர்ந்த்தேன்
உன் பெண்மையை


Monday, June 14, 2010

தலைசிறந்த பதிவர் ஆவது எப்ப்ப்புடீடீடீஈஈஈஈஈ...!


Blog யில் Superstar ஆவது, நாம் நினைப்பது போன்று எளிதான விஷயம் அல்ல. நிறைய கடினங்கள் உண்டு. தடைகள் உண்டு. இதை எல்லாம் பொருட்படுத்தாமல்உழைக்க வேண்டும்.

முதல் வேளையாக ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டும். அப்படி போட மறந்தால் கூட மன்னிக்கப்படும், ஆனால் ஒரு போஸ்ட்க்கு 50 comments குறையாமல் பெற வேண்டும்.

எல்லோருக்கும் புரிவது போலவும், எல்லோருக்கும் சுவாரஸ்யம் தருவது போலவும் உள்ள சில அறிய போஸ்ட்களை போட வேண்டும். எடுத்துக்காட்டாக , எதாவதுஒரு நண்பனை பற்றி, ' I met him first time @.…know him since..’ என்று ஆரம்பித்து ஒரு 10 பக்க சுய புராணம் படிக்க வேண்டும் . குறிப்பாக இந்த வகை தி வுகளைஆங்கிலத்தில் எழுதினால் மிக நன்று. சில GRE வாரத்தைகள் போட்டால் , மிகவும் நன்று.


காலை முதல் மாலை வரை, தான் சாபிட்டது, அணிந்த உடையின் நிறம், பார்த்த ஆட்கள் என்று (கடைசி ரக காதலர்கள் பேசிக்கொள்வது போல்) எல்லாகதைகளையும் எழுதி Blog ழகு படுத்த வேண்டும் .

நீங்கள் communicator இல் கூட்டமாய் மொக்கை போடுவதோ, அல்லது செயின் மெயில் களில் மொக்கை போடுவதோ கூடவே கூடாது. ‘FC la போய் Samosa சாப்டபோறேன். யார்லாம் வரீங்கஎன்று கேட்பதாக இருந்தால் கூட, அதற்கு நீங்கள் Blog தான் பயன்படுத்த வேண்டும்.

அதை விட முக்கியம் , நீங்கள் எழுதும் பதிவுகளில் ஏதேனும் ஒரு மூலையில் கூட சிந்தனைக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. அப்படி ன்று நடந்தால் உங்களின்Blogger Superstar ஆகும் முயற்சி இத்துடன் நின்று விடும்.

"
கண்ணாடி பாத்தேன். உன் முகம் தெரிந்தது "
"
இட்லி சாப்டேன். உன் முகம் தெரிந்தது "
என்று யாராவது ஒரு பெண் கவிதை(விஞர்களே என்னை மன்னிக்கவும்) ழுதியிருந்தால்,
அதை படித்து விட்டு, மனசாட்சியை சற்று ஓரம் தள்ளி விட்டு, 'சூப்பரா இருக்குங்க. எப்புடி ப்புடி உணர்ச்சி பூர்வமா எழுதறீங்க" என்று சொல்ல வேண்டும்.

நாளைக்கு நான் பீச் போறேன். எந் நிற உடை அணிந்தால் அழகாக இருக்கும் என்பது போன்ற அணைத்து புத்திசாலிகளையும் சிந்தனையில் ஆழ்ந்துவிடும் கேள்விகளை அடிக்கடி கேட்டு, அதன் மூலம் comments rate யில் ஒரு சதம் பெற்றால், ங்களுக்கு அது ஒரு Added Advantage.

இது போன்ற, இன்ன பிற சிறந்த பதிவுகளை எழுதி, நல்ல படைப்புக்களை தர முயற்சி செய்யும் சில பதிவர்களையும் அடையாளம் தெரியாமல் மாற்றி விடவேண்டும்.

இவ்வாறாக செய்து வந்தால், வருடத்தில் இந்த நாள் மாத்திரம் அல்ல எல்லா நாளும் நீங்கள் தான் லைசிறந்த பதிவர்.

பி.கு: இதை படிக்கும் வேளையில், 'இதில் என்ன தவறு இருக்கிறதுன்று நினைத்தாலோ, உங்களை தாக்கும் விதத்தில் எழுதி இருப்பதாக தோன்றினாலோ , நீங்கள்பாதி வெற்றி அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு ‘Blogger கூட்டத் தலைவர்ஆகும் வெற்றி வாய்ப்பு மிக அதிகம் என்பதில் அணுவளவும் சந்தேகம்இல்லை.