Tuesday, June 22, 2010

பிடித்த வசனங்கள் - I



"புத்திக்கு தெரியுது. மனசுக்கு தெரியல"
" எனக்கும் ரெண்டும் ஒன்னு தான்"

"அப்பா நீங்க தவம் இருந்து பெத்த புள்ள பா நான். என்ன கொன்னுடாதீங்க பா"
" டாக்டருக்கு கலர் டிவி, இன்ஸ்பெக்டருக்கு லேசெர் டிஸ்க், அப்பனுக்கு பாசமா? "

" உங்கள பொறுத்த வரைக்கும் நான் செய்றது கொலை. என்ன பொறுத்த வரைக்கும்
நான் செய்றது வெவசாயம் . புரியல? கல எடுக்குறது "

" தான் செய்றது தப்புனு கூட தெரியாத அளவுக்கு உங்களுக்கு தப்பு
பழகிப் போச்சு டா "


(படம்: இந்தியன்; வசனம்: சுஜாதா)


*******************************************************************************


"சும்மா கிண்டல் பண்ணாத. எனக்கும் அவருக்கும் இடைல எதும் இல்ல"
" அவ்ளோ டைட்டா கட்டி புடிச்சிட்டாரா ? "

(படம்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ; வசனம்: சுஜாதா)


*******************************************************************************

"சந்தோசம் ங்கறது அனுபவிக்கையில தெரியாதுங்க ; அது இல்லாம
போகுது பாருங்க. அப்ப தான் தெரியும் "

அபிராமி : 'இது உன்ன வெட்டுன அருவா. இந்த வீட்ல இருந்து வந்த
அருவா. பேர பாரு"

கமல் : 'கொ'....கோட்டைச்சாமி? "
அபிராமி : அது பெரிய கொம்பு . இது சின்ன கொம்பு. ஆனா பெரிய மாடு. "

(படம் : விருமாண்டி ; வசனம் : கமலஹாசன் )

*******************************************************************************

· " யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி. மதம் பிடித்தால் தொல்லை தான் "

(படம்: தசாவதாரம் ; வசனம் : கமலஹாசன் )

*******************************************************************************

· "எங்க அப்பா ஒரு Engineer, Writer, கோவக்காரர் “

( படம் : கன்னத்தில் முத்தமிட்டாள் ; வசனம்: சுஜாதா )

*******************************************************************************

· " வீரம் னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது "

(படம் : குருதிப்புனல் ; வசனம்: கமல்ஹாசன் )


No comments: