Tuesday, June 15, 2010

பகிர்தல்

ஷில்மிஷம்:

நீ செய்தாலும் சரி
நான் செய்தாலும் சரி
கடைசியில் நீ வெக்கப்பட்டு
பழியை என் மேல் தள்ளிவிடுகிறாய்..!


பிடித்தது:

உன்னில் எனக்கு பிடித்தது
என்ன தெரியுமா?
இக்கேள்விக்கான என் விடையை
மற்றிக்கொண்டே இருக்கிறாயே,
அது தான்..!


பெண்மை:

எல்லைகள் மீறிய
தருணங்களில் அல்ல,
அவை மறுக்கப்பட்ட
தருணங்களில் உணர்ந்த்தேன்
உன் பெண்மையை


No comments: