Saturday, June 19, 2010

காதலும் காமமும்


பல நேரங்களில்
என் கவனம் சிதறடித்து
வழி மாறி முனைவதற்கு
முழுக்க முழுக்க காரணம்
உன் கண்கள் மட்டுமே,
என்று சொன்னால்
அது பச்சைப் பொய்.

எது அழகு
என்று தேட வைக்கும்
அந்த விஷம அழகு
உன் மேனிக்கு
மட்டும் உண்டு.

காதலும் காமமும்
தன்டவாளக் கோடுகள்
என்றாய்.
இன்று ஏனோ
தடம் புரண்டது

பசி
மறக்கப் படுவதும்
மறுக்கப் படுவதும்
மறைக்கப் படுவதும்
இதைத் தவிர
வேறு எதில்?

காமரூபக் கதைகள்
படிக்கும் வேலையில்
எனை தடுத்த உனக்கு
தண்டணை மறுக்கப் பட்டது,
கதை நிஜம் ஆன
ஒரே காரணத்தினால்.

முதன்முறை
மனம் தொலைந்த
பொழுதின் அதே தயக்கம்.
இன்று முதன்முறை
வெட்கம் தொலைக்கும் பொழுதும்.

2 comments:

Anonymous said...

உங்கள் எல்லா கவிதைகளிலும் சுடும் உண்மை தெரியுது..

"உன் கண்கள் மட்டுமே,
என்று சொன்னால்
அது பச்சைப் பொய்..."

-சுபா

ŃąVêέŃ said...

நன்றி. உண்மையடி வெளிப்படையாகச் சொன்னாலே அது கவிதை ஆகிவிடும் நிலை வந்துவிட்டதும் உண்மையே ..!!